எடப்பாடி வைத்த டார்கெட்: இதை கண்டிப்பா எட்டுவோம்! தேர்தலுக்கு ரெடி!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லி அசோகா ஹோட்டலில் நடைபெற்றது. நாடு முழுவதிலுமிருந்து 39 கட்சிகள் இதில் பங்கேற்றன.

தமிழ்நாட்டிலிருந்து அதிமுக, பாமக, தமாகா, புதிய தமிழகம், ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. அதிமுக – பாஜக கூட்டணியில் உரசல்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்றைய கூட்டம் அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைந்தது. எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் இந்த கூட்டணிக்குள் அவ்வப்போது எழும் சிறு சிறு சலசலப்புகள் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பாக

செய்தியாளர்களைச் சந்தித்தார். “உலக அளவில் இந்தியாவின் பெருமையை பிரதமர் நரேந்திர மோடி உயர்த்தியுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்தபோது இந்தியாவில் பாதிப்பை குறைக்கும் வகையில் அவர் செயல்பட்டார். கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. உலக அளவில் சமாளித்து இந்தியாவில் ஒரு எந்த ஒரு நெருக்கடியும் ஏற்படாமல் வெற்றி கண்டவர் பாரத பிரதமர் மோடி

நடைபயணம், நட்டா, நாடாளுமன்றம் தேர்தல் அடுத்து என்ன

மக்களவைத் தேர்தலில் 330 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும். தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய பெரிய கட்சிகள் என்று இல்லாமல் அனைத்து கட்சிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியில் அதிமுக சுதந்திரமாக உள்ளது. அதிமுகவின் கொள்கையில் இருந்து விலக மாட்டோம். காங்கிரஸ் கூட்டணியில் திமுக அடிமையாக உள்ளது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை வகிக்கிறது. ” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.