Ayalaan: மாவீரன் வெற்றி.. 'அயலான்' படம் குறித்த சூப்பரான அப்டேட் கொடுத்த எஸ்கே: அடுத்த சம்பவம்.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது ‘மாவீரன்’. மடோன் அஸ்வின் இயக்கத்தில் ரிலீசாகி பாசிட்டிவ் விமர்சனங்களையும், பாராட்டுக்களையும் குவித்து வருகிறது. வசூலிலும் இந்தப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் சக்சஸ் மீட் நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.

‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் பிரபல இயக்குனர் மிஷ்கின், சரிதா, சுனில், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். யோகி பாபு நடிப்பில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்த ‘மண்டேலா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘மாவீரன்’ படத்தினை இயக்கியுள்ளார் மடோன் அஸ்வின்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும் இந்தப்படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு கேட்கும் அசரீரி குரலுக்காக விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்துள்ளார். கடந்த வாரம் வெளியான இந்தப்படம் ரூபாய் 50 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் சென்னையில் இந்தப்படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வைத்து ‘அயலான்’ படம் குறித்து சிவகார்த்திகேயன் பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ரவிக்குமாரின் இரண்டாவது படைப்பாக ‘அயலான்’ உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகார், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளார். மேலும், இந்தப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Ajith: டிராப் ஆன ‘ஏகே 62’ படம் குறித்து சந்தானம் பகிர்ந்த சூப்பரான மேட்டர்: ரசிகர்கள் வருத்தம்.!

இந்நிலையில் ‘அயலான்’ படம் குறித்து பேசியுள்ள சிவகார்த்திகேயன், இந்தப்படம் கண்டிப்பாக புதிய கதைக்களமாக இருக்கும். மாவீரனை போல் வித்தியாசமாக இருக்கும். ஆடியன்ஸ்க்கும் இந்தப்படம் நிச்சயமாக பிடிக்கும். தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் சாரும் பின்னணி இசை சம்பந்தமான வேலைகளை துவங்கிவிட்டார் என தெரிவித்துள்ளார்.

‘அயலான்’ படம் குறித்து சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ள கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் உருவாகும் முதல் ஏலியன், சயின்ஸ் பிக்சர் மற்றும் கிராபிக்ஸ் படமாக ரவிக்குமார் இதனை இயக்கியுள்ளார். பிரம்மாண்டமாக உருவாகி வந்த இந்தப்படம் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்தது. இதனையடுத்து தற்போது தீபாவளி வெளியீடாக ‘அயலான்’ படத்தினை படக்குழு ரிலீஸ் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா.. ‘கல்கி’ அவதாரமெடுத்த பிரபாஸ்.. தீயா இருக்கே: மிரட்டலான முதல் பார்வை.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.