அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் (26) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் போன்றோருக்கான அளவுகோல்களை அவ்வாறே நடைமுறைப்படுத்துவது குறித்தும், தற்போது எழுந்துள்ள ஏனைய பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண்பது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, அஸ்வெசும தலைவர் பி. விஜேரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு