அமலாக்கத் துறை கைது செய்துள்ளதை எதிர்த்து, தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்றைக்கு ஒத்தி வைத்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதிட்டதாவது:
பண மோசடி தடுப்புச் சட்டத்தில், குற்றஞ்சாட்டப்பட்டவரை தங்களுடைய காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.
உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பில், அமலாக்கத் துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் அல்ல என்று குறிப்பிட்டது. தனிப்பட்ட முறையில் அந்தத் தீர்ப்பை நான் ஏற்கவில்லை. ஆனால், அதன் அடிப்படையில் பார்க்கும்போது, செந்தில் பாலாஜியை கைது செய்யவோ, விசாரிக்கவோ அமலாக்கத் துறைக்கு அதிகாரம் கிடையாது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
‘வரும் ஆக., 13ம் தேதி வரை மட்டுமே விசாரிக்க அவகாசம் உள்ளதால், இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும்’ என, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.
வழக்கின் விசாரணை, இன்றும் தொடர்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement