ஓபிஎஸை ஒதுக்குகிறதா பாஜக? அண்ணாமலை பரபரப்பு விளக்கம்!

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கிய அண்ணாமலையின் இந்த நடை பயணம் இன்று 6வது நாளை எட்டியுள்ளது.

ஒவ்வொரு நாளும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து வரும் அண்ணாமலை அவர்களின் குறைகளை புகார் மனுக்களாகவும் பெற்று வருகிறார். அவ்வப்போது மக்கள் மத்தியில் உரையாற்றும் அண்ணாமலை, மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை எடுத்துக் கூறுவதோடு திமுக அரசின் குறைகளையும் கூறி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் குறித்து பேசினார். அதாவது பன்னீர்செல்வத்தை பாஜக ஒதுக்கவில்லை என்ற அண்ணாமலை, அவர் முதல்வராக இருந்தவர், பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என்றும் அவர் விரக்தியில் இல்லை என்றும் அண்ணாமலை கூறினார்.

மேலும் கோட நாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றார். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குறித்து விசாரிக்க அரசு உள்ளது, காவல்துறையும் உள்ளது என்றும் அண்ணாமலை தெரிவித்தார். கோட நாடு கொலை வழக்கை நடுநிலையாக நடத்தி தவறு செய்தவர்களை தண்டிக்கப்பட வேண்டும் என்றும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

அண்ணாமலை நடை பயணத்தின் தொடக்க விழாவிற்கு முன்னாள் முதல்வரான ஓ பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதே சமயம் அதிமுக பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்பி உதயகுமார், அண்ணாமலையின் நடை பயண தொடக்க விழாவில் பங்கேற்றார்.

நடை பயணத்திற்கு முன்பே, அண்ணாமலையிடம் ஓபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என யார் நினைத்தாலும் தங்களின் நடை பயணத்தில் பங்கேற்கலாம் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பை பாஜக ஒதுக்குவதாக பேசப்பட்டது. இந்நிலையில் ஓபிஎஸை ஒதுக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார் அண்ணாமலை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.