புழல் சிறையில் அடைக்கப்பட்டாலும் செந்தில் பாலாஜி மீதான ED-ன் டார்கெட் முடிவுக்கு வராது போல. எப்படி முடியும். இன்னும் விசாரிக்கவே ஆரம்பிக்கல. அதுக்குள்ள முடிஞ்சிருமா? இப்படி தான் கேட்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இன்று கூட உச்ச நீதிமன்றத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வாதத்தை அமலாக்கத்துறை எடுத்து வைத்துள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கில் சிக்கல் என்ன உடைத்து பேசிய முத்தலீஃ
அமலாக்கத்துறை கைது
இதன்மூலம் கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி கொண்டு நடந்த முறைகேடு விவகாரம் சூடு தணியாமல் இன்னும் அப்படியே இருப்பதை பார்க்க முடிகிறது. கடைசியாக அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற 3வது நீதிபதி தீர்ப்பு வழங்கியிருந்தார்.
செந்தில் பாலாஜி மேல்முறையீடு
இதை எதிர்த்து செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அங்கு விசாரணை, ஒத்திவைப்பு, மீண்டும் விசாரணை, மீண்டும் ஒத்திவைப்பு என சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 2) நடந்த விசாரணையில் அமலாக்கத்துறை முன்வைத்த வாதங்களில்
இரண்டு விஷயங்கள்
மிகவும் முக்கியமானது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.மருத்துவமனை மற்றும் நீதிமன்ற காவலில் உள்ள காலத்தை விசாரணை காலமாக கருதக் கூடாது.
குவியும் புகார்கள்
இதன்மூலம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முயற்சிப்பது தெரிய வருகிறது. மேலும் தங்களுடைய வாதத்தில், செந்தில் பாலாஜி மீது ஊழல், பொதுமக்கள் பணத்தில் முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளன.
புழல் சிறையில் செந்தில் பாலாஜி
அதுமட்டுமின்றி இந்த வழக்கில் தங்களை விசாரணை நடத்த விடாமல் அனைத்து விதங்களில் தடுத்தார் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர். செந்தில் பாலாஜியை தற்போது வரை எந்தவித விசாரணைக்கும் உட்படுத்த முடியவில்லை. ஏனெனில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், அங்கும் அவர் மருத்துவ சிகிச்சையில் தான் இருக்கிறார்.
நீதிமன்ற காவல்
எனவே மருத்துவமனையில் இருந்த நாட்கள், நீதிமன்ற காவலில் இருக்கும் நாட்கள் ஆகியவற்றை விசாரணை காலமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. வழக்கமாக அமலாக்கத்துறைக்கு 15 நாட்கள் மட்டுமே போலீஸ் காவலில் எடுக்க அனுமதிக்கப்படும். அதன்பிறகு அவர் நீதிமன்ற காவலுக்கு சென்றுவிடுவார்.
உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை
அப்படி பார்த்தால் ஒரு மாதத்திற்கும் மேல் எங்களின் விசாரணைக்கு வரவே இல்லை. எனவே விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வெண்டும் என்று அமலாக்கத்துறை வாதிட்டது. இந்த வழக்கில் அடுத்தகட்ட உத்தரவு என்னவாக இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.