டெல்லியில் மீண்டும் வலுக்கும் பருவமழை… அதிகாலையில் கொட்டிய பலத்த மழை.. திணறும் தலைநகர்!

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை ருத்ர தாண்டவம் ஆகிறார். ஹிமாச்சல் முதல் கேரளா வரை கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஹிமாச்சல் மாநிலத்தில் கடந்த மாதம் முதலே வெளுத்து வாங்கும் மழையால் அம்மாநிலமே சின்னாபின்னமாகியுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் கடந்த 74 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் மழைப்பொழிவை பெற்றுள்ளது..

இதேபோல் உத்தரகாண்ட், சண்டிகர், பீகார், ஓடிசா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இதேபோல் ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களிலும் வரலாறு காணாத மழை பெய்தது. வட மாநிலங்களில் பெய்த கனமழையால் கடந்த மாதம் டெல்லி யமுனை நதியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

டெல்லி யமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டிய வெள்ளத்தால் தலைநகரின் பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியது. இந்தியா கேட், ரெட் ஃபோர்ட், சிவில் லைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆள் உயரம் புகுந்த வெள்ள நீரால் கடல் போல் காட்சியளித்தது. இதனால் டெல்லி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள்.

இந்நிலையில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலையிலேயே கனமழை கொட்டியது. நேற்று மாலை முதலே லேசான மழை பெய்த நிலையில் நொய்டா மற்றும் குருகிராம் பகுதிகளில் இன்று காலை நல்ல மழை பெய்தது. டெல்லியின் பதர்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கியது.

கனமழை காரணமாக டெல்லி என்சிஆர் பகுதிகளிலும் தண்ணீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. இந்நிலையில் டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் இன்று நாள் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. காரவால் நகர், சிவில் லைன்ஸ், தில்ஷாத் கார்டன், சீமாபுரி, சீலம்பூர், ஷஹாத்ரா, விவேக் விஹார், செங்கோட்டை, ப்ரீத் விஹார், ராஜீவ் உள்ளிட்ட டெல்லியின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் வானதியா இது… மாடர்ன் லுக்கில் மிரட்டும் ஷோபிதா துலிபாலா!

சௌக், ஐடிஓ, இந்தியா கேட், அக்ஷர்தாம், லோடி சாலை, நேரு ஸ்டேடியம், டிஃபென்ஸ் காலனி, லஜ்பத் நகர், மாளவியா நகர், கல்காஜி மற்றும் துக்ளகாபாத் ஆகிய பகுதிகளில் கொட்டிய கனமழையால் அப்பகுதிகளில் மழைநீர் தேங்கி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.