In the case of assaulting the power board officer, BJP 2 years imprisonment for MP | மின்வாரிய அதிகாரியை தாக்கிய வழக்கில் பா.ஜ. எம்.பி.,க்கு 2 ஆண்டு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஆக்ரா: உ.பி.யில், மின்வாரிய அதிகாரியை தாக்கிய வழக்கில் பா.ஜ. எம்.பி.,க்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது.

உ.பி. மாநிலம் எட்டவா தொகுதி பா.ஜ. எம்.பி., ராம் ஷங்கர் காத்ரியா, இவர் 2011-ல் ஆக்ரா எம்.பி.யாக இருந்த போது ஷாகட் மால் என்ற கட்டத்தில் மின் திருட்டு தொடர்பாக ஆய்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரியை தாக்கியதாக போலீசில் புகார் கூறப்பட்டது.

latest tamil news

வழக்கு எம்.பி., எல்.எல்.ஏ..க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 12 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கு இன்று முடிவுக்கு வந்தது. நீதிபதி அர்ஜூன், வழங்கிய தீர்ப்பில், அரசு தரப்பு போதிய சாட்சியங்களை சமர்பிக்கவில்லை என்பதால் எம்.பி., ராம் ஷங்கர் காத்ரியாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக ராம்ஷங்கர் காத்ரியா தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.