ஜெயிலர் : கேரளாவில் காட்சிகள் அதிகரிப்பு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ஜெயிலர். தர்பார் மற்றும் அண்ணாத்த என இரண்டு படங்களின் சரிவுக்கு பிறகு வெளியாகும் ரஜினிகாந்த் படம் என்பதால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. அதுமட்டுமல்ல, பீஸ்ட் பட விமர்சனங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் உடன் நெல்சன் இணைந்ததால் இந்தபடம் மீதான எதிர்பார்ப்பு, தமிழை தாண்டி மற்ற தென்னிந்திய மொழி ரசிகர்களிடமும் இருந்தது.

அந்த வகையில் கேரள தியேட்டர்களில் கிட்டத்தட்ட 80 சதவீத காட்சிகள் ஜெயிலர் படத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தன. படம் வெளியானதில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து மாலை மற்றும் இரவு காட்சிகள் இன்னும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டன. குறிப்பாக நள்ளிரவையும் தாண்டி பல தியேட்டர்களில் 3 மணிக்கு கூட காட்சிகள் திரையிடப்பட்டன. ஏற்கனவே கேரளாவில் முன்பதிவில் சாதனை செய்திருந்த ஜெயிலர் திரைப்படம் முதல்நாள் வசூலிலும் அசத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.