சுங்கச்சாவடிகளில் பகல் கொள்ளை.. பரனூர்தான் டாப்.. ரூ. 28 கோடி.. சிஏஜி அறிக்கையில் அம்பலம்!

மத்திய கணக்கு தணிக்கை குழுவான சிஏஜி சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ் நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள 5 சுங்கச்சாவடிகள் விதிகளை பின்பற்றாமல் 132 கோடி ரூபாய் அளவுக்கு அதிகமாக சுங்கக் கட்டணம் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 4 வழிச்சாலையை மேம்படுத்தும் போது கட்டணத்தை மாற்றி அமைக்காமல் கட்டணத்தில், 75 சதவீதத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் திட்டப்பணி நடைபெற்ற போது தேசிய நெடுஞ்சாலையின் விதியை பின்பற்றி அந்தப் பாதையில் சுங்கக்கட்டணத்தை 75 சதவீதமாக குறைக்காமல் வசூல் செய்துள்ளனர்.

இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.6.54 கோடி அளவுக்கு அதிகமாக சுட்டக் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2021 வரை பரனூர் சுங்கச்சாடியில் விதிகளை மீறி வாகன ஓட்டிகளிடம் 22 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களை இணைக்கும் சுங்கச்சாவடியான பரனூர் சுங்கச் சாவடியில் 28 கோடி ரூபாய்க்கு மேல் விதிகளை மீறி சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் 132 கோடி ரூபாய்க்கு மேல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே துவாரகா விரைவு சாலை திட்டத்தின் மூலம் ஒரு கிலோ மீட்டர் தொலைவு சாலைக்கு 250 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பரனூர் சுங்கச்சாவடி விஷயத்திலும் மோசடி நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.