பாக்கியலெட்சுமி சீரியலில் இருந்து விலகிய ரித்திகா!

விஜய் டிவி நடிகையான ரித்திகா தமிழ்செல்வி குக் வித் கோமாளி மற்றும் பாக்கியலெட்சுமி சீரியல்களில் நடித்து பிரபலமானார். சில மாதங்களுக்கு முன் இவருக்கு திருமணமானதை தொடர்ந்து சின்னத்திரை கமிட்மெண்டுகளில் இருந்து விலகி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது பாக்கியலெட்சுமி சீரியலை விட்டும் விலகிவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் ரித்திகாவின் ரசிகர்கள் பலரும் சோகமடைந்துள்ளனர். அதேசமயம் முக்கிய கதாபாத்திரமான அம்ரிதா கதாபாத்திரத்தில் ரித்திகாவுக்கு பதிலாக நடிகை அக்ஷிதா நடிக்க கமிட்டாகியுள்ளதாக தெரியவருகிறது. அதற்கேற்றார் போல் பாக்கியலெட்சுமி குழுவினர் அண்மையில் வெளியிட்ட புகைப்படங்களில் ரித்திகாவுக்கு பதிலாக அக்ஷிதா இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.