ஓணம் சிறப்பு ரயில்கள் 2023 லிஸ்ட்… கொங்கு மண்டல பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு!

ஓணம் பண்டிகை என்றாலே கேரளா தான் நினைவுக்கு வரும். மொத்தம் 10 நாட்கள் அறுவடை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. எனவே கேரளா மாநிலத்தில் 10 நாட்களும் விடுமுறை விடப்படும். தமிழகத்தை பொறுத்தவரை வரும் 29ஆம் தேதி மட்டும் ஒருநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கேரளா மக்கள் வசித்து வருகின்றனர்.

​ஓணம் சிறப்பு ரயில்இவர்கள் சொந்த ஊருக்கு சென்று ஓணம் பண்டிகையை சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில் சிறப்பு ரயில்கள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரயில் எண் 06565 / 06566 கொண்ட பெங்களூரு – கொச்சுவேலி – பெங்களூரு சிறப்பு கட்டண ரயில் இன்றும், நாளையும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு – கொச்சிவேலி சிறப்பு ரயில் இன்று (ஆகஸ்ட் 24) பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு கொச்சுவேலியை நாளை காலை 7.15 மணிக்கு சென்றடையும்.பெங்களூரு – கொச்சுவேலி ரயில்மறுமார்க்கத்தில் நாளை (ஆகஸ்ட் 25) மாலை 6.05 மணிக்கு கொச்சுவேலியில் புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். இது ஒரே ஒரு சேவையாக வழங்கப்படுவது கவனிக்கத்தக்கது. இந்த ரயில் கர்நாடகா, தமிழகம், கேரளா என மூன்று மாநிலங்களை இணைக்கிறது. குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை ஓசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், போடனூர் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக செல்கிறது.
செகந்திராபாத் – கொல்லம் ரயில்கேரளாவில் பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், செங்கனச்சேரி, செங்கனூர், மாவெலிக்கரா, காயன்குளம், கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதையடுத்து தென் மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் எண் 07119 / 07120 கொண்ட செகந்திராபாத் – கொல்லம் – செகந்திராபாத் பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் இடம்பெற்றுள்ளது. இது ஆகஸ்ட் 25ஆம் தேதி செகந்திராபாத்தில் மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு கொல்லத்தை அடுத்த நாள் இரவு 11.20 மணிக்கு வந்தடையும்.​கொங்கு மண்டல கனெக்‌ஷன்மறுமார்க்கத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி கொல்லத்தில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் இரவு 11.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடைகிறது. இந்த ரயில் ஆந்திரா, தமிழகம், கேரளா என மூன்று மாநிலங்கள் வழியாக செல்கிறது. குறிப்பாக தமிழகத்தில் எடுத்து கொண்டால் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் என கொங்கு மண்டலப் பகுதிகள் வழியாக செல்கிறது.
முன்பதிவு தொடக்கம்கேரளாவை பொறுத்தவரை பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், செங்கனச்சேரி, செங்கன்னூர், மாவெலிக்கரா, காயன்குளம், கொல்லம் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக செல்கிறது. ஆந்திர மாநிலத்தில் பேகும்பேட், லிங்கபள்ளி, விகாராபாத், சித்தாபூர், ராய்ச்சூர், குண்டக்கல், கடப்பா ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக செல்கிறது. மேற்குறிப்பிட்ட இரண்டு ரயில்களுக்கான முன்பதிவும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரயில் பயணிகள் ஹேப்பிஅதிலும் செகந்திராபாத் – கொல்லம் – செகந்திராபாத் ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தான் தொடங்கியது. எனவே ரயில் பயணிகள், குறிப்பாக ஓணம் பண்டிகையை கொண்டாடுவோர் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.