நிலவில் இறங்கும் பிரக்யான் ரோவர்: இந்திய குடியரசுத் தலைவர் வாழ்த்து!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் நேற்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவின் தென் பகுதியில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

நிலவின் தென் பகுதியில் விக்ரம் லேண்டர் தரை இறங்கியதற்கு உலக நாடுகள் இந்தியாவை பாரட்டி வருகின்றன. விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பின்னர் சில மணி நேரங்கள் கழித்து புழுதி அடங்கிய பின்னர் உள்ளிருந்து பிரக்யான் ரோவர் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வெளிவந்த பின்னர் ரோவர் விக்ரம் லேண்டரையும், விக்ரம் லேண்டர் பிரக்ஞான் ரோவரையும் படம் பிடிக்கும்.

பிரக்யான் ரோவர் நேற்று இரவு 11 மணியளவில் வெளிவரும் என கூறப்பட்ட நிலையில் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இஸ்ரோ வெளியிடவில்லை.

இந்நிலையில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது ட்விட்டர் பதிவில், “விக்ரம்-லேண்டரின் உள்ளே இருந்து பிரக்யான்-ரோவரை வெற்றிகரமாக அனுப்பியதற்காக இஸ்ரோ குழு மற்றும் அனைத்து இந்திய மக்களுக்கும் நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விக்ரம் லேண்டர் தரையிறங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, சந்திரயான் 3 இன் மற்றொரு கட்டத்தின் வெற்றி பதிவாகியது.

சந்திரன் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தும் பிரக்யானை விஞ்ஞானிகள் மற்றும் இந்திய மக்களுடன் இணைந்து நானும் உற்சாகத்துடன் எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். குடியரசு தலைவரின் ட்வீட்டை இஸ்ரோ ரீ ட்வீட் செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.