பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் 6 நாடுகள்: மாநாட்டில் சந்திரயான்-3 வெற்றியை புகழ்ந்தார் பிரதமர் மோடி| Chandrayaan: 6 countries to join BRICS: PM Modi praises Chandrayaan-3 success at summit

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜோகன்னஸ்பர்க்: அர்ஜெண்டினா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, ஈரான் உள்ளிட்ட 6 நாடுகளை பிரிக்ஸ் அமைப்பில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில், சந்திரயான்-3 வெற்றி இந்தியா சார்ந்தது மட்டுமல்ல. இந்த வெற்றிக்கு பின் உலக நாடுகளின் விஞ்ஞானிகள்(உலகளாவிய அறிவியல் சமூகம்) பங்களிப்பு உள்ளது என பிரதமர் மோடி பேசினார்.

latest tamil news

இணையும் 6 நாடுகள்

தென்ஆப்ரிக்கா ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (ஆகஸ்ட் 24) நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: அர்ஜெண்டினா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, ஈரான் உள்ளிட்ட 6 நாடுகளை பிரிக்ஸ் அமைப்பில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 வெற்றி

நேற்று, இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் மெதுவாக தரையிறங்கியது. சந்திரயான்-3 வெற்றி இந்தியா சார்ந்தது மட்டுமல்ல. இந்த வெற்றிக்கு பின் உலக நாடுகளின் விஞ்ஞானிகள்(உலகளாவிய அறிவியல் சமூகம்) பங்களிப்பு உள்ளது. இந்திய மக்கள் மற்றும் நமது விஞ்ஞானிகள் சார்பாக, உலக விஞ்ஞானிகளுக்கு நன்றி. இந்த வரலாற்று தருணத்திற்கு வாழ்த்துக்கள்.

இந்தியா ஆதரவு

இந்த 3 நாள் சந்திப்பில் பல முடிவுகள் எடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கத்திற்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளித்து வருகிறது. பிரிக்ஸ் கூட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

latest tamil news

பேப்பர் படித்த பிரதமர் மோடி


இதற்கிடையே, பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட மோடி, சந்திரயான் வெற்றி குறித்து செய்தி வெளியிட்டுள்ள தென் ஆப்ரிக்காவின் செய்தித்தாளை படிக்கும் போட்டோ ஒன்று சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.