டொனால்டு ட்ரம்ப் அதிரடி கைது… தேர்தல் மோசடி வழக்கில் அட்லாண்டா நீதிமன்றம் நடவடிக்கை!

கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் அந்நாட்டின் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று அதிபர் ஆனார். அப்போதே அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் ஜார்ஜியாவில் அதிபர் தேர்தலின் முடிவுகளை மாற்ற சதி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக டொனால்டு ட்ரம்ப் உட்பட மொத்தம் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டா நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கில் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த முடிவு செய்த அட்லாண்டா நீதிமன்றம் ட்ரம்ப் உட்பட 19 பேருக்கும் பிடி வாரண்ட் பிறப்பித்தது. மேலும் 25 ஆம் தேதியான இன்றுக்கும் அனைவரும் ஆஜாராகவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இஸ்ரோ ஏவுதளம் தமிழகத்தில் இருந்து கைநழுவி போனதற்கு காரணம் இதுதானா? அண்ணாமலை பகீர்!

இந்நிலையில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் 24 ஆம் தேதி மாலை 7 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி இன்று அதிகாலை தனது தனிப்பட்ட விமானத்தில் சென்று அட்லாண்டா சிறையில் சரண் அடைந்தார். அவரை அதிகாரிகள் கைது செய்தனர். சுமார் 20 நிமடங்கள் சிறையில் இருந்த டொனால்டு ட்ரம்ப்பின் அங்க அடையாளங்கள், அவரது உயரம், அவரது உடல் எடை மற்றும் முடியின் ஆகியவற்றை சிறைத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

ட்ரம்ப் எப்போதும் போல தனது சிக்னேச்சர் ஷர்ட்டா வெள்ளை சட்டையை அணிந்தார். அதற்கு கான்ட்ராஸ்ட்டாக சிவப்பு நிற டை கட்டியிருந்த ட்ரம்ப், நேவி ப்ளூ சூட் அணிந்து சிறையில் சரணடைந்தார். பின்னர் 2 லட்சம் அமெரிக்க டாலர்களை பிணைத் தொகையாக செலுத்திய ட்ரம்ப், 20 நிமடங்களில் சிறையில் அனைத்து ஃபார்மாலிட்டிகளையும் முடித்தார்.

பின்னர் அட்லாண்டா சிறையில் இருந்து நியூஜெர்சி செல்வதற்காக விமான நிலையத்திற்கு புறப்பட்ட டொனால்டு ட்ரம்ப் தம்ப்ஸ் அப் செய்தப்படி சென்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவிற்கு மிகவும் சோகமான நாள் என்றார். இதனிடையே அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் மக்ஷாட் எனப்படும் போலீஸ் ரெக்காடுக்களுக்காக அட்லாண்டா சிறையில் எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.

அதில் நெற்றியை சுறுக்கி புருவத்தை உயர்த்தி கூரிய பார்வையுடன் கோபமாக போஸ் கொடுத்துள்ளார் டொனால்டு ட்ரம்ப். மேலும் NEVER SURRENDER என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப் இந்த ஆண்டில் மட்டும் 4 முறை சரண் அடைந்துள்ளார். இதற்கு முன்பு 3 முறை நீதிமன்றங்களில் ஆஜரான டொனால்டு ட்ரம்ப் இம்முறை சிறையில் ஆஜராகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களில் ,முன்னணியில் உள்ளார் டொனால்டு ட்ரம்ப். இந்நிலையில் அதிபர் தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கும் ஜார்ஜியாவில் உள்ள சிறையில் ட்ரம்ப் சரணடைந்திருப்பது, வரும் அதிபர் தேர்தலில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

தேசிய விருதை தட்டி தூக்கிய ஆலியா பட்டின் அழகிய புகைப்படங்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.