'சன்'னால் பதவிக்கு வந்தவர்களுக்கு சந்நியாசி குறித்து தெரியாது… ஸ்டாலினை சாடிய தமிழிசை!

சமீபத்தில் உத்தரப்பிரதேசத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காலின் விழுந்து ஆசி பெற்றார். யோதி ஆதித்யநாத், ரஜினிகாந்தை விட வயதில் இளையவர் என்பதால் அவரது காலில் விழுந்தது சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. பலரும் வயதில் குறைந்த யோகி ஆதித்யநாத்தின் காலில் ரஜினிகாந்த் விழுந்திருக்கக்கூடாது என விமர்சனம் செய்தனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகர் ரஜினிகாந்த் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் யோகிகள் மற்றும் சந்நியாசிகளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது தனது வழக்கம் என்றுக்கூறி முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் திமுக நாளிதழான முரசொலி பத்திரிகை, காவி கட்டியவர் எல்லாம் சந்நியாசி அல்ல என கட்டுரை வெளியிட்டது.

‘தாடி வைத்தவர் எல்லாம் தாகூர் அல்ல’ என்பதைப் போலத் தான் காவி கட்டியவர் எல்லாம் சந்நியாசி அல்ல என கடுமையாக விமர்சனம் செய்தது. இந்நிலையில் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ரஜினியே பதில் கூறிவிட்ட நிலையில் யோகி ஆதித்யநாத் சந்நியாசி இல்லையா என முரசொலி ஆராய்ச்சியில் இறங்கியுள்ளதாகவும், இவர்கள் அவருக்கு சர்டிஃபிகேட் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் சிறு வயதில் இருந்து 5 முறைக்கு மேல் யோகி ஆதித்யநாத் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

ஆளுநர்கள் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை

அவர் சன்னா இருந்து பதவிக்கு வரவில்ல, சந்நியாசியாக இருந்து பதவிக்கு வந்தவர் என்றும் சன்னை வைத்த பதவிக்கு வந்தவர்களுக்கு சந்நியாசிகளின் பதவி தெரியாது என்றும் முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக சாடினார். சுயமான உழைப்பில், மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்து யோகி ஆதித்யநாத் பதவிக்கு வந்துள்ளார் என்றும் ரஜினிகாந்த் காலில் விழுந்தார் என்பதற்காக இருவரையும் தாக்கி பேசுகிறார்கள் என்றும் தமிழிசை கூறினார்.

அவரவருக்கு இருக்கும் பண்பாட்டையும் பழக்கத்தையும் அவர்களுடையது என விட்டுவிட வேண்டும் என்றும் நீங்கள் நினைப்பதை மற்றவர்கள் செய்ய வேண்டும் என்பது ஜனநாயகமா சர்வாதிகரமா என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார். ஆன்மிகவாதிகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் கோவில்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.