பள்ளிகளில் முஸ்லீம் மாணவிகள் அபாயா அணிய தடை… பிரான்ஸ் அரசு போட்ட பரபரப்பு உத்தரவு!

பிரான்ஸ் கல்வித்துறை அமைச்சர் கேப்ரியல் அட்டல் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு அந்நாட்டை பரபரப்பிற்கு ஆளாக்கியுள்ளது. TF1 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது, பள்ளிக்கு அபாயா அணிந்து வருவது இனிமேல் சாத்தியமில்லை. விரைவில் பள்ளிகளில் முஸ்லீம் மாணவிகள் அபாயா அணிந்து வர தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

முஸ்லிம்கள் கலாச்சாரத்திற்கும் கேரளா ஸ்டோரி திரைப்படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

கல்வித்துறை அமைச்சர் அதிரடி

மேலும் பேசுகையில், மதச்சார்பின்மை என்பது ஒருவர் அடிமைத்தனத்தில் இருந்து பள்ளிகள் வாயிலாக சுதந்திரம் பெறுவதே ஆகும். அதற்கு பிரான்ஸ் அரசு முடிந்தவரை உறுதுணையாக நிற்கும். நீங்கள் வகுப்பறையில் நுழையும் போது, பார்த்ததும் உங்களின் மதம் என்னவென்று யாரும் கூறிவிடக் கூடாது எனக் குறிப்பிட்டார்.

பசங்க பள்ளிக்கூடம் வரலன்னா பெற்றோருக்கு சிறை… மிரட்டும் சவுதி அரேபியா!

பள்ளிகள் திறப்பு ஏற்பாடு

வரும் செப்டம்பர் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அனைத்து பள்ளிகளுக்கு அரசு சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அபாயா என்பது முஸ்லீம் பெண்கள், மாணவிகள் அணியும் நீண்ட உடை. தலையை சுற்றி வட்டமிட்டிருக்கும் வகையில் ஆடை அணிந்திருப்பர்.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

புர்கா அணிய தடை உத்தரவு

தேவைப்படும் போது கண்கள் மட்டும் தெரியும் வகையில் மறைக்கும் வகையில் அணிவர். இது அவர்களின் மத நம்பிக்கை சார்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. பொதுவெளியில் முஸ்லீம் பெண்கள் இவ்வாறான ஆடையை தான் அணிந்து செல்கின்றனர். இருப்பினும் சில நாடுகளில் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

எமிரேட்ஸ் டிராவில் இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்… ஒரே நாளில் மாறிய வாழ்க்கை!

முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் நாடு

அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் முஸ்லீம் பெண்கள் புர்கா அணிய பல ஆண்டுகளாக தடை நீடித்து வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஐரோப்பாவில் முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் நாடாக பிரான்ஸ் இருக்கிறது.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மத வழிபாட்டு சுதந்திரம்

ஆனால் அவர்களின் மத வழிபாட்டு சுதந்திரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து முஸ்லீம் மாணவிகள் பள்ளிகளில் அபாயா ஆடை அணிவது கேள்விக்குறியானது. இதுபற்றி தொடர் விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தான் பிரான்ஸ் அரசு முக்கியமான நடவடிக்கையை எடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.