செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் எப்போது? வழக்கறிஞர் டீம் வேகம்! நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் இன்று புழல் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் மே 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற அனுமதி பெற்று அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 7ஆம் தேதி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரித்தது. ஐந்து நாள்கள் விசாரணையை முடித்துக் கொண்டு 12ஆம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 3 நாள்கள் அதிகரிக்கப்பட்டது. அதுவும் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று செந்தில் பாலாஜி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மைனஸ் மார்க் எடுத்தவன் டாக்டரா? உங்களுக்கு பைத்தியமா புடிச்சிருக்கு? – செந்தில் வேலன் சரமாரி கேள்வி

முன்னதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை 120 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. 3000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிக்கை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களின் நகல் தனக்கு வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி கேட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று எம்.பி, எம்.எல்.ஏக்கள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்னர் ஆஜர்படுத்தப்பட்டார். செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவுக்கும், அமலாக்கத்துறை வழக்கறிஞருக்கும் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதி வழங்கப்பட்டது. செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி உத்தரவிட்டார். அடுத்த முறை செந்தில் பாலாஜியை காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தினால் போதும் என்று கூறினார். அவரிடம் குற்றப்பத்திரிக்கை நகலும் அளிக்கப்பட்டது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனால் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டதை ஆராய்ந்து ஜாமீன் கோருவதற்கான வேலையை செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் டீம் தொடங்கியுள்ளது. விரைவில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்படலாம் என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.