'ஜெயிலர்' படத்தின் வெற்றி எதிரொலி: 'தலைவர் 170' குறித்த ரஜினியின் அதிரடி முடிவு.!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘தலைவர் 170’ படத்தில் ‘ஜெயிலர்’ சென்டிமென்ட்டை ரஜினி கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் பார்மூலா’ஜெயிலர்’ பட வெற்றியை தொடர்ந்து ‘தலைவர் 170’ பட வேலைகள் வேகமெடுத்துள்ளது. த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஜெயிலரை போல் தனது அடுத்த படமும் மிகப்பெரிய ஹிட்டடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் ரஜினிகாந்த். இதற்காக ‘ஜெயிலர்’ பார்மூலாவை ‘தலைவர் 170’ படத்திலும் கொண்டு வர வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் ரஜினி.
த.செ. ஞானவேல்கமர்ஷியல் ரீதியாக ஹிட்டடித்த ஜெயிலரை தொடர்ந்து முழுக்க அழுத்தமான திரைக்கதை கொண்ட ‘தலைவர் 170’ படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. மேலும் இந்தப்படத்தை த.செ. ஞானவேல் இயக்கவுள்ளதும் கோலிவுட் திரையுலகினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஏனென்றால் இவரின் முந்தைய படமான ‘ஜெய் பீம்’ விமர்சனரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. இருளர் பழங்குடியினர் வாழ்வியல் மற்றும் அவர்கள் இந்த சமுதாயத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் ‘ஜெய் பீம்’ படத்தில் அழுத்தமாக பதிவு செய்திருந்தார் த.செ. ஞானவேல்.
தலைவர் 170 பூஜைலைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள ‘தலைவர் 170’ படத்திற்கான லுக் டெஸ்ட்டை நிறைவு செய்து விட்டார் ரஜினி. இந்தப்படத்திற்காக தாடியை எல்லாம் ட்ரிம் செய்து அட்டகாசமான லுக்கிற்கு மாறியுள்ளார் ரஜினி. ‘ஜெயிலர்’ படம் வெளியாவதற்கு முன்பே இமயமலை சென்ற ரஜினி, அண்மையில் மீண்டும் சென்னை திரும்பினார். இதனையடுத்து ‘தலைவர் 170’ படத்திற்கான பூஜையும் நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
மல்டி ஸ்டார்இந்தப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், சர்வனாந்த் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் லேட்டஸ்டாக ‘தலைவர் 170’ படத்தில் பாகுபலி பட வில்லன் ராணா மற்றும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்த துஷாரா விஜயன் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
போலீஸ் அதிகரியாக ரஜினி’ஜெயிலர்’ படத்தில் பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் இணைந்து நடித்தது படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. இதனால் தற்போது ‘தலைவர் 170’ படத்திலும் அந்த சென்டிமென்ட்டை ரஜினி கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப்படத்தில் போலி என்கவுண்டர்களை எதிர்த்து போராடும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.