ஜேசன் சஞ்சய் கண்டிப்பா ஜெயிப்பார்: விஜய் மகன் என்பதால் அல்ல, அந்த ஒரு…

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படம் இயக்குவது குறித்து லண்டன் மற்றும் கனடாவில் படித்தார். படித்து முடித்துவிட்டு நாடு திரும்பிய அவரை பார்த்த இயக்குநர்களோ, நீங்களே ஹீரோ மாதிரி இருக்கிறீர்களே என்று கூறி தங்கள் படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள்.

ரஜினிக்கு யோகி ஆதித்யநாத் தான் Role Model – இயக்குனர் பிரவீன் காந்தி
பல நல்ல கதைகளுடன் இயக்குநர்கள் ஜேசன் சஞ்சயை அணுகினார்கள். யார் என்ன சொன்னாலும் நான் கேட்பதாக இல்லை. எனக்கு கேமராவுக்கு முன்பு அல்ல பின்னால் இருக்கத் தான் விருப்பம் என்று தெளிவாக கூறிவிட்டார்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இதையடுத்து விஜய் மூலம் முயற்சிகள் நடந்தது. மகனின் விருப்பமே என் விருப்பம் என்று கூறிவிட்டார் விஜய். அப்பா போன்று நடிகர் அல்ல தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர் போன்று இயக்குநராகும் முடிவில் இருந்து ஜேசன் மாறவே இல்லை.

இந்நிலையில் தான் அவர் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவரின் முதல் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதை பார்த்தவர்களோ, விஜய் மகன் புடிச்சாலும் புளியங்கொம்பாக பிடித்திருக்கிறார். நல்ல தயாரிப்பு நிறுவனம். ஜேசன் சஞ்சய்யின் வித்தியாசமான கதையில் உருவாகவிருக்கும் படத்தை பார்க்க காத்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்

என்ன வேண்டும் என்பதில் எப்பொழுதுமே தெளிவாக இருந்து வருகிறார் ஜேசன் சஞ்சய். அப்படிப்பட்டவர் சொன்ன கதை பிடித்துப் போய் அவர் இயக்கும் படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்ததில் ஆச்சரியம் இல்லை. அந்த தெளிவுக்காகவே அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

லைகா தயாரிப்பில் இயக்குநராகும் விஜய் மகன்

தன் முதல் படத்தில் வளர்ந்து வரும் நடிகர்கள், நடிகைகளை நடிக்க வைக்கவிருக்கிறார் ஜேசன். விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்கிற ஆசை பல இயக்குநர்களுக்கு உண்டு. அந்த ஆசை ஜேசன் சஞ்சய்க்கும் இல்லாமல் இல்லை.

எடுத்த எடுப்பில் அப்பாவை வைத்து படம் இயக்க ஜேசன் விரும்பவில்லை. முதலில் அனுபவம் பெற்று அதன் பிறகு அப்பாவிடம் டேட்ஸ் கேட்கும் திட்டத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், குட்டி பாய் ஏ.ஆர்.அமீன் இசையில், த்ருவ் விக்ரம் நடிப்பில் ஒரு படம் உருவாக வேண்டும் என சினிமா ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். அவர்களின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஜெயிலர் பற்றி அந்த வார்த்தை சொன்ன விஜய்: அந்த மனுஷனுக்கு பெரிய மனசுய்யா

என்னவாக இருந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஆள் விஜய். அதனால் மகனுக்கு பெரிய வாய்ப்பு கிடைத்திருப்பது குறித்தும் அமைதியாகவே இருக்கிறார். அது தானே விஜய்யின் குணமே.

புதிதாக இயக்குநராகியிருக்கும் ஜேசன் சஞ்சய்க்கு விஜய் ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் இருக்கிறது. இதற்கிடையே இயக்குநராகியிருப்பது எல்லாம் சரி குட்டி தளபதி. எதிர்காலத்தில் நீங்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும். அதை நாங்கள் பார்க்க வேண்டும் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

எத்தனையோ இயக்குநர்கள் நடிகர்களாகிவிட்டார்கள். அதனால் ஜேசன் சஞ்சயும் ஒரு நாள் ஹீரோவாக வேண்டும் என்பதே விஜய் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.