
பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா?
தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா நடித்த 'குட்பை' என்கிற பாலிவுட் படம் முதலில் வெளியானது. இந்த ஆண்டின் துவக்கத்தில் 'மிஷன் மஞ்சு' வெளியானது. இரு படமும் ராஷ்மிகாவிற்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் அவர் நடித்துள்ள 'அனிமல்' படம் டிசம்பர் மாதம் முதல் தேதியில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு இந்த படம் ஹிந்தி தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கிறார். பாபி தியோல், திரிப்தி டிம்ரி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி உள்ளார்.
படத்தை பூஷன் குமார், கிரிஷன் குமாரின் டீ சீரிஸ் நிறுவனம், முராத் கெடானியின் சினி 1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்துதான் ராஷ்மிகா பாலிவுட்டில் நீடிப்பாரா? அல்லது டோலிவுட்டுக்கே திரும்புவாரா என்பது தெரியவரும்.