டில்லி காவிரி ஒழுங்காற்றுக குழு தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், டில்லியில் கடந்த 18-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்குத் தினமும் 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. காவிரி […]
