ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் அன்பை பெற்று பிரபலமாகியுள்ளார் சரவண விக்ரமன். அவர் தற்போது பிக்பாஸ் சீசன் 7ல் என்ட்ரியாகியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்காக கடைசிநாள் ஷூட்டிங்கை முடித்து பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரியான சரவண விக்ரமன் தன் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த வாய்ப்பு நான் ரொம்ப நாள் எதிர்பார்த்தது தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் போலவே எனக்கு இதுவும் பெரிய ஆபர். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணனுக்கு எப்படி சப்போர்ட் கொடுப்பீர்களோ, அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சரவணனுக்கு சப்போர்ட் கொடுங்கள்' என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து அதிகமானோர் தங்களுடைய வாழ்த்துகளை சரவணனுக்கு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.