அந்தமான் கடல் பகுதியில் லேசான நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

போர்ட் பிளேயர்,

அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே அந்தமான் கடல் பகுதியில் இன்று அதிகாலை 3.20 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.