கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனத்துக்கு உயர்நீ திமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் திருவிழாக்களில் இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்கள், வசனங்களை பயன்படுத்தக் கூடாது, உயிரினங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தேனி அருகே உள்ள முத்துத்தேவன்பட்டியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயில் திருவிழாவையொட்டி கலை நிகழ்ச்சி நடந்தது. அதில் இளைஞர் ஒருவர் பாம்புகளுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையறிந்த தேனி வனச்சரகர் செந்தில்குமார், அந்த வீடியோவில் இருக்கும் இளைஞர் குறித்து விசாரித்தார்.
அவர் வீரபாண்டியைச் சேர்ந்த முகில்வண்ணன் (23) என்பதை கண்டுபிடித்து, தேனி வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் அவரைக் கைதுசெய்தனர். மேலும் அவரிடமிருந்து 3 நல்ல பாம்புகள், 2 சாரை பாம்புகள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த பாம்புகளுக்கு பற்கள் பிடுங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கைதான முகில்வண்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோயில் திருவிழா நிகழ்ச்சியில் பாம்புகளுடன் நடனம் ஆடிய வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகளை தேனி வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.