குஜராத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம்| Bus overturns in Gujarat: 40 injured

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் தியோதர் நகரில் இருந்து ஜூனாகத் நோக்கி அரசுப் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 55 முதல் 60 பயணிகள் இருந்துள்ளனர். பஸ் வானா கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையோர பள்ளித்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பஸ்சில் இருந்த பயணிகளில், சுமார் 40 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த அந்த பகுதி மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பயணிகள் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.