சேலம், மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே காவிரிபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 1958-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தற்போது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் 170 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். ஏழு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று ய்ஜிங்கள்கிழமை விடுமுறை தினம் முடிந்து, வழக்கம் போல மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது பள்ளியில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, பள்ளியின் சமையலறை கூடத்திற்கு சென்று பார்த்தபோது சமையலறை கூடத்தின் சுவற்றில் மனிதக் கழிவுகளை பூசி சமூக விரோதிகள் சிலர் அட்டூழியம் செய்துள்ளனர்.
இது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுவர்ணலதாவிற்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் மதிய உணவு இப்பள்ளியில் தயார் செய்யாமல் அருகில் உள்ள தனியார் கட்டடத்தில் உணவு தயார் செய்து மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு மேட்டூர் ஆர்.டி.ஓ தணிகாசலம், தாசில்தார் விஜய், டி.எஸ்.பி மரியமுத்து ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதனை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வி, கொளத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சமூக விரோதிகளை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், “இரவு நேர காவலாளிகளை நியமித்து பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். மேலும் பள்ளி சமையலறை கூடத்தின் சுவற்றில் மனித மலத்தை பூசி சென்ற சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதுதொடர்பாக மேட்டூர் டி.எஸ்.பி மரியமுத்துவிடம் பேசியபோது, “பள்ளி தலைமையாசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு அருகில் உள்ள வீடுகளை விசாரித்து வருகிறோம். பள்ளி விடுமுறை நாட்களில் தான் இதுமாதிரியான செயல்கள் நடந்துள்ளன. மேலும் பள்ளி வளாகத்துக்குள் சமூக விரோதிகள் மது அருந்துவது வழக்கமாக இருந்துள்ளது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.