தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள வன்னிமாநகரத்தைச் சேர்ந்தவர் வேம்படிதுரை. இவர், சேலத்தில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இவரின் உறவினர் ஒருவரின் இறப்பு இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சொந்த ஊரான வன்னிமாநகரத்திற்கு வந்தார். மாலையில் உறவினரின் உடல் அடக்கம் முடிந்த பிறகு வன்னிமாநகரம் – வள்ளிவிளை சாலை ஓரத்தில் உள்ள தோட்டத்தில் குளித்து விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அதிவேகத்தில் வந்த கார், வேம்படிதுரையின் பைக் மீது மோதியுள்ளது.

இதில் தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்த வேம்படிதுரை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் பைக் மீது மோதிய கார் சாலையோரம் கிடந்த மணலில் புதைந்து நகரமுடியாமல் நின்றதால் காரை நகர்த்த முடியாமல் திணறினர். இதனையடுத்து காரில் இருந்து இறங்கிய 5 பேர் வேம்படித்துரையை கத்தியால் குத்திவிட்டு அங்குள்ள வாழைத்தோட்டம் வழியாக தப்பியோடினர். படுகாயம் அடைந்த வேம்படிதுரை, கத்தியால் குத்தப்பட்டதில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாலூகா காவல் நிலைய போலீஸார் வேம்படிதுரையின் உடலைக் கைப்பற்றி திருச்செந்து£ர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வன்னிமாநகரத்தில் உள்ள கோயில் கொடைவிழாவில் ஏற்பட்ட பிரச்னையில் கடந்த 2016-ம் ஆண்டு விவசாயி சிவகுரு(எ)சிவலட்சம் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை வழக்கில் வேம்படிதுரை உள்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால் கொலை செய்யப்பட்ட சிவகுரு(எ) சிவலட்சத்தின் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் பழிக்குப்பழியாக வேம்படிதுரையை கொலை செய்துள்ளது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.