சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்று 3வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மூச்சு விட சிரமப்படுவதால், செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்பு சளியால் இடைவிடாது இருமல் இருந்து வந்ததன் காரணமாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை இரவு, உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து மூன்றாவது […]
