தமிழகத்தில் தொடரும் மழை… பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
வங்க கடலில் உருவான வளிமண்ட சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று காலை 8.30 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை எனவும், தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.