சென்னை எடப்பாடி பழனிச்சாமி மீது கே சி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடியை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே சி பழனிச்சாமி மீது போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாகப் பணம் வசூலித்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். கே சி பழனிச்சாமி இந்த வழக்கில் தன்னை பற்றித் தெரிவித்த கருத்துகள் தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை […]
