சென்னை சென்னை காசிமேடு மீனவர்கள் மிக்ஜம் புயல் எச்சரிக்கை காரணமாக மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை. நாளை வங்கக்கடலில் உருவாகும் மிக்ஜம் புயல், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கி வந்து, 5- ஆம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. மேலும் புயல் சின்னம் காரணமாக வங்கக்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் மீனவர்கள் கரை திரும்பும்படி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை […]
