திருப்பதி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை வனபோஜன உற்சவம் நடைபெறுகிறது. இன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே வைபவ உற்சவ மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம் நடக்கிறது. வழக்கமாக இந்த உற்சவம் கோகர்பம் அணை அருகில் உள்ள பார்வேடு மண்டபத்தில் நடக்கும். தற்போது மழை பெய்து வருவதாலும், புயல் உருவாகி உள்ளதாலும் வைபவ உற்சவ மண்டபத்தில் நடத்தப்படுகிறது. இதையொட்டி இன்று காலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சாமியை வைபவ உற்சவ மண்டபத்துக்குக் கொண்டு சென்று […]
