சபரிமலை யாத்திரர்களுக்கு நாளொன்றிற்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொடுக்க, நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் பெருந்தோட் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மலையக ஐயப்ப ஒன்றியத்தின் நிர்வாக குழுவினருக்கும், அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல்; நேற்று (05.12.2023) அமைச்சில நடைபெற்றுள்ளது.

ஐயப்ப பக்தர்களுக்கு நாளொன்றுக்கு 100 விசாக்கள் மட்டுமே வழங்கப்படுகின்றது, அதன் செல்லுபடிகாலம் ஒரு மாதமாக உள்ளது. எனவே, விசாக்களையும், கால எல்லையையும் அதிகரித்து தருமாறு ஒன்றியத்தினர் இக் கலந்துரையாடலின் போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து இலங்கைக்கான இந்திய தூதவர் கோபால் பாக்லேவை தொலைபேசிமூலம் தொடர்புகொண்ட அமைச்சர், இது தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்பலனாக நாளொன்றுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், செல்லுபடியாகும் கால எல்லையை 2 மாதங்களாக அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.