
புதிய படத்தில் பவித்ரா மாரிமுத்து
மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண் பவித்ரா மாரிமுத்து. டாக்டரான அவர் ஆக்டராக விரும்பம் கொண்டு மாடலிங் துறையில் நுழைந்தார். பிறகு 'முதலும் நீ முடிவும் நீ' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு டைரி, பீட்சா 3 படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் புதிய படத்தில் விக்ராந்த் ஜோடியாக நடிக்கிறார்.
படத்தை வில் அம்பு படத்தை இயக்கிய ரமேஷ் சுப்பிரமணியம் எழுதி இயக்குகிறார். பிக் பேங்க் சினிமாஸ் தயாரிக்கிறது. முக்கிய வேடங்களில் யோகி பாபு, இனிகோ பிரபாகர் நடிக்கின்றனர். பாலமுரளி பாலு இசை அமைக்கிறார். கேகே ஒளிப்பதிவு செய்கிறார். சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகும் இப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படுகிறது.