டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இருந்து இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மக்களவையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களவையில் 13ந்தேதி அன்று (புதன்கிழமை) பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞா்கள், எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒரு பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு அதிகாரிகள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளது. […]
