சென்னை: நடிகை அம்மு அபிராமி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் காதல் குறித்தும் மனம் திறந்து பேசி உள்ளார். தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான நடிகை அம்மு அபிராமி, பைரவா படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதன்பின் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து அனைவருக்கும் தெரியும் முகமாக மாறினார்.
