தூத்துக்குடி நாளை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாநகரங்கள் முழுவதும் இந்த கன மழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நெல்லையின் அடையாளங்களில் ஒன்றான வண்ணாரப்பேட்டை பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்குத் தாமிரபரணி ஆற்றில் […]
