
பான் இந்தியா நடிகை ஆகும் ருக்மணி வசந்த்
கேஜிஎப், காந்தாரா மற்றும் சலார் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்தபடம் 'பஹீரா'. ஸ்ரீ முரளி கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் ருக்மணி வசந்த் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். சூரி இயக்கியிருக்கிறார். பிரகாஷ்ராஜ் முக்கியமான வேடத்தில் நடித்திருக்க, அஜ்னீஷ் இசையமைத்திருக்கிறார்.
நாயகன் முரளிஸ்ரீயின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. கன்னடத்தில் தயாராகும் இந்த படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளிவருகிறது. கேஜிஎப் மற்றும் சலார் பாணியிலான சூப்பர் ஆக்ஷன் ஹீரோ படமாக தயாராகி உள்ளது. படம் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'சப்த சாகரடாச்சே எலோ' (ஏழு கடல்களுக்கு அப்பால்) படத்தில் நடித்து புகழ்பெற்ற ருக்மணி வசந்த் இந்த படத்தின் மூலம் பான் இந்தியா நடிகை ஆகிறார்.