விடாத துரத்தலும் விழுந்த பொன்முடியும். சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் மனிதர்களுக்கு மரணம் என்பது எப்படி எப்போது என்பதை கணிக்க முடியாதோ அதேபோலத்தான் ஆட்சியாளர்களுக்கும் வீழ்ச்சியை கணிக்கவே முடியாது. நேற்று முன்தினம்வரை திமுக அரசாங்கத்தில் கொடிகட்டி பறந்தவர், உயர்கல்வித்துறை அமைச்சர். நேற்று அரசாங்க காரில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டு, நிர்கதி ஆக்கப்பட்டு விட்ட பரிதாபம். வருவாய்க்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என உயர் நீதிமன்றமே அறிவித்து விட்டதால் இந்த நிலைமை. திமுகவில் குறுகிய […]
