சென்னையில் அண்மையில் பெய்த புயல் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் மணலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளநீருடன் அருகில் இருந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெயும் சேர்ந்து அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் வெள்ளநீருடன் கடலில் சென்று கலந்த கச்சா எண்ணெயால் மீனவர்களும் வாழ்வாதாரத்தை இழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக நடந்த விசாரணையில் சென்னை பெட்ரோகெமிக்கல் லிமிடெட் (சி.பி.சி.எல்.) நிறுவனத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவே காரணம் என்று தெரியவந்தது. இது […]
