3rd ODI: India Win – Win the series | 3-வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியா வெற்றி – தொடரை வென்றது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பார்ல்: இந்தியா, தென் ஆப்ரிக்க மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது.

தென் ஆப்ரிக்கா சென்று உள்ள இந்திய அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற, தொடர் 1-1 என சமனில் இருந்தது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது, கடைசி போட்டி இன்று பார்ல் நகரில் உள்ள போலந்து பார்க் மைதானத்தில் நடந்தது. முதலில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பவுலிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்ய களம் இறங்கிய இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 108 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 297 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் எடுத்தது. தென்ஆப்ரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டோனி டி ஜோர்சி 81 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார். இதையடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று 2-1 கணக்கில் தொடரை கைப்பற்றியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.