5 soldiers martyred | காஷ்மீரில் பயங்கரவாதிகள்அட்டூழியம்; 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் உள்பட 5 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இப்பகுதியில் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ராணுவ வாகனங்கள் சேதமுற்றன. இருப்பினும் இரு தரப்பிலும் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது.

லஷ்கர் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக தெரிகிறது. சம்பவ இடத்திற்கு கூடுதல் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.