திருப்பதி திருப்பதி செல்லும் அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. அடிக்கடி திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டம் காணப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்னூல் மாவட்டம் ஆதோணியைச் சேர்ந்த கவுசிக் என்ற சிறுவன் சிறுத்தை கடித்து காயம் அடைந்தான். பிறகு நல்லூரைச் சேர்ந்த லக்ஷிதா என்ற சிறுமியைச் சிறுத்தை கடித்துக் கொன்றது. வனத்துறையினரும், தேவஸ்தானமும் இணைந்து நடைபாதை ஓரம் கூண்டுகள் வைத்து 6 சிறுத்தைகளைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். திருப்பதி தேவஸ்தானம் […]
