சென்னை தொடர் விடுமுறையையொட்டி ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது அரையாண்டு விடுமுறை, வார விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை எனத் தொடர் விடுமுறை வருவதால், விடுமுறை மற்றும் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக வெளி மாவட்டங்களில் பணிபுரியும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கி உள்ளனர். குறிப்பாகச் சென்னை மற்றும் பெங்களூருவில் தங்கி பணிபுரிந்துவரும் மக்கள், வாகனங்கள் மூலமாக தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு வருவதால், முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த […]
