திருப்பூர்: மக்காச்சோள கதிர் அரவை இயந்திரத்தில் சிக்கிய இளைஞர் பரிதாப பலி

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகேயுள்ள ஊத்தான்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள், இவரது மகன் பேச்சிக்குட்டி(24). இவர் தனியாருக்‌கு சொந்தமான மக்காச்சோள கதிர் அறுவடை செய்யும் டிராக்டருடன் கூடிய இயந்திரத்தின் ஓட்டுநராக வேலை செய்து வந்‌தார். இந்த நிலையில் குண்டடம் அடுத்துள்ள வேங்கிபாளையத்தில் ராஜேஸ்வரி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மக்காச்சோள கதிர் அறுவடைப் பணியில் ஈடுபட்‌டுக்கொண்டிருந்தார். 

அப்போது இயந்திரத்தில் மக்காச்சோளதட்டுகள் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. சிக்கிய தட்டையை ஓட்டுநர் பேச்சிக்குட்டி எடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக பேச்சிக்குட்டியின்‌ கை இயந்திரத்தில் சிக்கி அவரை உள்ளே இழுத்துவிட்டது. இதில் கை மற்றும் கால் இயந்திரத்தில் சிக்கி துண்டாகியதில் சம்பவ இடத்திலேயே பேச்சிக்குட்டி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பேச்சிக்குட்டியின் துண்டான உடலை  மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்து, துண்டான உடல்களுக்கு இறுதி மருத்துவ பணிகள் செய்து முடித்த பின்னர் உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.