லண்டன்: இயேசுவின் அவதாரத்தைக் கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு லண்டன் மாநகரமே வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.கட்டிட அலங்காரங்கள், ஆடல்பாடல் கச்சேரிகள் மற்றும் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வண்ண விளக்குகள், மலர் தோரணங்கள், சிகரம் போன்று உயர்ந்து நிற்கும் கிறிஸ்துமஸ் மரங்கள் ஜொலிக்கும் நகர வீதிகள் என லண்டன் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விழாக்கோலம் கொண்டுள்ளது.லண்டனில் இந்த ஆண்டும் ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட முக்கிய கடை வீதிகள் ஜொலிக்க தொடங்கியுள்ளன. அந்தரத்தில் நட்சத்திரங்கள், மின்னும் கட்டிட சுவர்கள் என ஒவ்வொரு பகுதியும் புதுமையான வேலைபாடுகளுடன் அலங்கரிக்கப் பட்டு உள்ளது. இ்நநகரம் மட்டுமல்லாது அமெரிக்கா, பராகுவே, இத்தாலி, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளிலும் கி்றிஸ்துமஸ் விழா களை கட்டி வருகிறது. இந்த காட்சிகளின் வீடியோ வைரலாகி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement