காத்மண்டு: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நகைகள், இனிப்புகள், வஸ்திரங்கள் மற்றும் பொருட்கள் அடங்கிய நினைவுப் பரிசுகளை நேபாளம் அனுப்பி வைக்க உள்ளது.
உ.பி., மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் ஜன.,22ல் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேபாளம் சிறப்பு நினைவு பரிசுகளை அனுப்பி வைக்க உள்ளது. பல்வேறு வகையான நகைகள், பொருட்கள், வஸ்திரங்கள் மற்றும் இனிப்புகள் அடங்கிய பரிசுகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக நேபாளத்தில் உள்ள ஜானகி கோயில் நிர்வாகி ராம் ரஷன் தாஸ் வைஷ்ணவ் கூறுகையில், நினைவு பரிசுகள் பேரணியாக கொண்டு செல்லப்படும். வரும் ஜன.,18 ல் ஜானக்புர்தாம் என்ற இடத்தில் துவங்கும் பேரணி, ஜலேஷ்வர்நாத், மலங்வா, சிம்ரவுன்காத், கதிமாய், பிர்குஜ், குஷிநகர், சித்தார்த்நகர், கோரக்பூர் வழியாக உ.பி.,யின் அயோத்தியை ஜன.,20 அன்று சென்றடையும். அன்றைய தினமே, நினைவுப்பரிசுகள் ராமர் கோயில் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புகைப்படங்கள் வெளியீடு
இந்நிலையில், ராமர் கோயிலில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த புகைப்படங்களை அறக்கட்டளை வெளியிட்டு உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement