கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு – 6 பேர் பலி

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணம் சொனராவில் உள்ள சிடெட் ஒபெகன் பகுதியில் நேற்று அதிகாலை கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, நிகச்சி நடைபெற்ற பகுதிக்குள் நுழைந்த கும்பல் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாக சுட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 26 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசா படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடி நடத்திவிட்டு தப்பியோடிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.