மதுரை: அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான மருத்துவப்பரிசோதனை செய்து காளைகளுக்கு தகுதிச்சான்று வழங்கும் பணிகள் தொடங்கியது.
தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாக கருதப்படுகிறது. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும். பொங்கல் பண்டிகை அன்று 15-ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டும், மறுநாள் 16-ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டும், 17-ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியும் நடக்கிறது.